Friday, 17 April 2009

நானும் ஒரு வில்லன்

ஜன்னல் ஓரம் தலைசாய்ந்து நீ

அழுத போது மழையில் நனைந்த

கம்பிகளும் உன்னோடு சேர்த்து அழுகிறது

முட்டாள் போல் ஓரம் நின்று ரசிக்கும்

என்னை கண்டு திட்டாதவர்கள் இல்லை

உன்னை சுற்றி மொய்க்கும் உன் தோழிகள்

என்னை வில்லன் போல் பார்க்கிறார்கள்

அவர்களுக்கு தெரியுமா???

பல நேரம் என்னால், சில நேரம் எனக்காக

உன் அழுகையும் என் வசம் ஆனது என்று!!!

No comments: